Connect with us
 

News

மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது !

Published

on

ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த் ராஜ், ராம்தாஸ், அருண்ராஜா காமராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் மரகத நாணயம். ஒரு காமெடி பேய் கதை என்றாலும் கொஞ்சம் த்ரில் கலந்து சொன்னதால் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்தது.

இப்படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.கே. சரவணன் இந்த படத்துக்கு பின்னர் வேறு எந்தவொரு படமும் இயக்கவில்லை. இப்போது மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளாராம்.

மரகநாணயம் இரண்டாம் பாகத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாம்.