Connect with us
 

News

ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு ரைசா வில்சன் நோட்டீஸ் !

Published

on

பிரபல தோல் மருத்துவர் பைரவி செந்தில் அளித்த தவறான சிகிச்சையால் முகம் வீங்கி விட்டது என்று நடிகை ரைசா வில்சன் குற்றம் சாட்டிய விவகாரத்தில் ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு மருத்துவர் பைரவி. செந்திலுக்கு ரைசா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

1.27 லட்சம் செலுத்தி சிகிச்சை எடுத்தும் முகம் பொழிவு இல்லாமல் முகத்தில் ரத்தக்கசிவு, வீக்கம் ஏற்பட்டது என நடிகை ரைசா கூறியுள்ளார்.

இந்நிலையில் நஷ்ட ஈட்டை 15 நாளில் தராவிடில் உங்கள் மேல் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் ரைசா வில்சனின் வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.