Connect with us
 

News

மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நிதி அக்ர்வால் !

Published

on

நடிகர் மற்றும் நடிகைகள் சினிமாவில் நடிப்பதை தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து பல கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இதற்கு பல எதிர்ப்புகளும் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் ரம்பி விளையாட்டை விளம்பரப்படுத்திய தமன்னா கோர்ட்டு வழக்கில் சிக்கினார்.

சமீபத்தில் முன்னணி நடிகைகள் ஹன்சிகா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால், அமலா பால் உள்ளிட்ட பல நடிகைகள் அதிக பணம் வாங்கிக்கொண்டு வெளிநாட்டு மது பானங்களை இவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்து வருவதற்கு பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் ஈஸ்வரன் பட நாயகி நிதி அகர்வாலும் சிக்கியுள்ளார். தற்போது இவர் ஒரு மதுபான விளம்பரத்தில் வந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மது பாட்டிலை திறந்து கையில் உள்ள கிளாஸ்ஸில் ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்றும் அந்த பிராந்தியை நன்றாக பருகலாம் என்று பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நிதி அகர்வால் மது விளம்பரத்தில் நடித்தது சமூக ஆர்வலர்களை மிகவும் ஆந்திரமடைய செய்துள்ளது. இளைஞர்களை நிதி அகர்வால் மது அருந்த தூண்டுவதாக வலைத்தளத்தில் பலர் இவரை விமர்சித்தும் வருகிறார்கள்.

பொதுவாக முன்னணி நடிகைகள் அனைவரும் இது போன்ற விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள். காரணம் இவர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை இப்படி பட்ட ஒரு விளம்பரத்திலேயே வாங்குவதுதான் காரணம் என்கிறார்கள் ஒரு சிலர்.