Connect with us
 

News

நாங்கள் ஏலியனை நம்புகிறவர்கள் போதை பொருளை அல்ல – அயலான் தயாரிப்பாளர் !

Published

on

இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத், யோகி பாபு நடிப்பில் கடந்த 5 ஆண்டுகளாக மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் பொங்கல் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ராஜேஷ் பேசும் போது ‘ அயலான் இப்போதே பிளாக்பஸ்டர் ஆகிவிட்டது. நாங்கள் ஏலியனை நம்புகிறவர்கள். போதை பொருட்கள் மற்றும் உயர் மேக்கப்பை நம்புகிறவர்கள் இல்லை. என கூறினார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இது போன்ற படங்கள் வெளிவருவதால் அதை கிண்டல் செய்வது போல இந்த பேச்சு அமைந்துள்ளது.