Connect with us
 

News

தென் மாவட்ட மக்களுக்கு உதவிகள் செய்த தளபதி விஜய் !

Published

on

தளபதி விஜய் மிக விரைவில் அரசியலில் கால் பதிக்கவுள்ளார். மிக விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதால் சில நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி செய்தார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு தொகுதிகளிலும் நூலகம் அமைத்து கொடுத்துள்ளார். அண்மையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மக்களுக்கு பல உதவிகள் செய்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடி,நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட பலத்த மழை வெல்லத்தால் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். அங்கும் சென்று நெல்லையில் உள்ள மாதா மாளிகையில் சுமார் 1500 குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

1500 குடும்பத்தினருக்கு அரசி, மளிகை பொருட்கள் மற்றும் சில புதிய உடைகள் வழங்கினார். மேலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினர் சிலருக்கு நிதி உதவியும் வழங்கினார் தளபதி விஜய்.