Connect with us
 

News

காக்கா – கழுகு கதை என்னை கஷ்டப்படுத்தி விட்டது – ரஜினி !

Published

on

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் சலாம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 26-ம் தேதி நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ நான் ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் சொன்னா காக்கா – கழுகு கதையை சமூக ஊடகங்களில் எல்லாம் பேசியது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

விஜய் என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பும் இருந்தபோது விஜய்க்கு அப்போது 13 வயது. அப்போது சந்திரசேகர் எனது பையன் என விஜய்யை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நடிப்பில் ஆர்வம் இருக்கிறது என என்னிடம் சொன்னார் விஜய். அதன் பின்னர் படிப்படியாக நடித்து தனது திறமை மூலம் இன்று தமிழ் சினிமாவில் இந்த இடத்திற்கு வந்துள்ளார். தற்போது அவர் அரசியலுக்கு போவதாக கேள்விப்பட்டேன்.

இந்த நிலையில் எனக்கு விஜய் போட்டி என சொல்வது என் மனதுக்கு கஷ்டமாக உள்ளது. விஜய் சொன்னது போல அவர் படத்துக்கு போட்டி அவர்தான். என் படத்துக்கு போட்டி நான்தான்.

விஜய் வந்து எனக்கு போட்டின்னு நான் நினைச்சா அது எனக்கு மரியாதை இல்லை. எனக்கு கெளரவம் இல்லை. விஜய் என்னை போட்டின்னு நினைச்சா அது அவருக்கு மரியாதை இல்லை. இரண்டு பேரின் ரசிகர்கள் இந்த விவாதத்தை தவிர்த்து விடுங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள் என கேட்டுக்கொண்டார்.