Connect with us
 

News

பணம் ஒன்றும் வானத்தில் இருந்து கொட்டவில்லை – மஞ்சிமா மோகன் !

Published

on

அச்சம் என்பது மடமையடா, என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்கு அறிமுகமான நடிகை மஞ்சிமா மோகன் அதன் பின்னர் சத்ரியன்,தேவராட்டம் போன்ற படங்களில் நடித்தார்.

இவர் தற்போது கொரோனா பற்றி விழிப்புணர்வுக்காக ஒரு வீடீயோ பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். அதில் அவர் அனைவரும் வீட்டில் இருந்தால் மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியிருந்தார். அதற்கு பதில் கொடுத்த ஒரு ரசிகர் வீட்டில் இருந்தால் எப்படி பணம் சம்பாதிப்பது என்று கேட்டு வறுத்து எடுத்தார்.

இந்த பதிவை பார்த்த மஞ்சிமா மோகன் கடும் கோபமடைந்து நம்முடன் இப்படி செய்யும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வழக்கமாக இது போல குதர்க்கமாக பேசும் அறிவு இல்லாத நபர்களுக்கு நான் பதில் அளிப்பதில்லை கொரோனாவை தடுக்க மக்கள் வீட்டில் இருந்தால் மட்டுமே தடுக்க முடியும்ன்னு என்னுடைய பதிவுக்கு அந்த நபர் மறுப்பு பதிவு தெரிவித்துள்ளார். வேலைக்கு போகாமல் வீட்டில் இருப்பது மிகவும் எளிது என்று நினைத்தால் அது மிகவும் தவறானது சகோ.நடிகைகள் என்றால் எங்களுக்கு ஒன்றும் பணம் வானத்தில் இருந்து கொட்டவில்லை நாங்களும் வேலை செய்த்தால் மட்டுமே பணம் என்று கூறியுள்ளார்.