News
விஜய் சார் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன் – நடிகை ஐஸ்வர்யா
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தளபதி விஜய் குறித்தும் அவருடைய புதிய அரசியல் பயணம் குறித்தும் மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“விஜய் சார் ஒரு மிகப்பெரிய ஆளுமை. அவர் அரசியலில் எடுத்து வைத்துள்ள இந்த புதிய முயற்சி சிறப்படைய வேண்டும். அவர் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவருடைய கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அவருக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த வாழ்த்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா லட்சுமி தற்போது பல முக்கியத் திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
