News
நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது – ரவிமோகனின் வைரல் பதிவு !
நடிகர் ரவிமோகன் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவுகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
நண்பர்கள் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு பக்கபலமாக நிற்கும் உண்மையான நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அதேவேளையில், சிலரின் தொடர்ச்சியான சட்டவிரோத மற்றும் நீதிமன்ற அவமதிப்பு செயல்களுக்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
குறிப்பாக அந்தப் பதிவில், “நான் உயிரோடும் இருக்கும் வரை, நாங்கள் நால்வரும் ஒரே அறையில் மீண்டும் ஒன்றாக இருக்கவே மாட்டோம்” என்று திட்டவட்டமாக அவர் குறிப்பிட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், தான் இயக்கி வரும் ‘அன் ஆர்டினரி மேன்’ படத்தின் காட்சிகள் மற்றும் இசையை தனது குடும்பத்தினருக்குக் காட்டியதாகவும், தன் தந்தை தனக்காக உற்சாகமாகக் கைதட்டிய தருணம் வாழ்வின் பொன்னான தருணம் என்றும் நெகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்துள்ள வீடியோவும் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
