Connect with us
 

News

அஜீத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி !

Published

on

இன்று உலக நாடுகளையே மிரள வைத்து வரும் கொரோனா வைரஸ் பல கோடி மக்களின் இயழ்பு வாழ்க்கை மட்டும் அல்லாமல் பல லட்சம் உயிர்களையும் எடுத்து விட்டது. இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை இதனை இப்படியும் தடுக்க வேண்டும் என்ற முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் சினிமா துறை சார்ந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் பிரதமரின் நிவாரண நிதிக்காக உதவி செய்து வருகின்றனர் அதன் வரிசையில் ராகவா லாரன்ஸ் அவர்களும் பிரதமர் நிதிக்கு ரூ.50 லட்சம், முதர்வர் நிதிக்கு ரூ.50 லட்சம் , ஃபெப்ஸி ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் நடன கலைஞர்கள் சங்கத்திற்க்கு ரூ.50 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம் தினக்கூலிகள் மற்றும் தான் பிறந்த ராயபுர பகுதி ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சம் என மொத்தமாக 3 கோடி வழங்கினார்.