Connect with us
 

News

அஷோக் செல்வன் – ப்ரியா ஆனந்த் நடித்த மாயா குறும்படம் !

Published

on

அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் ஆகிய இருவரும் இணைந்து நடித்த தமிழ் குறும் படத்துக்கு சிகாகோ திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் குறும்படத்தின் பெயர் மாயா சசி இயக்கியுள்ள இந்த குறும்படத்தை விய் புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது.

படத்தை பற்றி இயக்குனர் சசி கூறுகையில்:-

ஒரு திரைக்கதை எழுத்தாளர் தனது படைப்பின் கதையை நீண்ட காலமாக எப்படி திட்டமிடுகிறா? அவரின் கனவு படைப்பை எப்படி தீர்மானிக்கிறார்? இறுதியில் அவர் என்ன கதையை முடிவு செய்கிறார்? அவரின் பார்வையாளர்கள் யார்? என்பதே மாயா குறும்படத்தின் கதை.

என் கல்லூரி நாட்களில்தான் இந்த கதையை எழுதினேன். எனது முதல் திரைப்படத்தின் திரையிடலுக்கு பிறகே குறும் படத்தை வெளியிட விரும்பினேன். ஆனாலும் மாயா படத்துக்கு விருது கிடைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி.