Connect with us
 

News

மீண்டும் நடிக்க வந்தது தாய் வீட்டுக்கு வந்த உணர்வை தருகிறது – ஹன்சிகா !

Published

on

நடிகை ஹன்சிகா தொழில் அதிபர் சோஹைல் கதூரியாவை கடந்த மாதம் 4-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் தற்போது ஒப்புக்கொண்ட படங்களில் ஹன்சிகா நடிக்கவுள்ளார்.

இதற்காக சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று மும்பையிலிருந்து சென்னை வந்தார். விமான நிலையில் ஹன்சிகா ரசிகர்கள் மாலை அணிவித்தும் ரோஜா பூ கொடுத்தும் வரவேற்றனர்.

அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஹன்சிகா : நான் மீண்டும் நடிக்க வந்தது மகள் தன் தாய் வீட்டுக்கு வந்த உணர்வை தருகிறது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

இந்த வருடம் எனது 7 படங்கள் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு எனக்கு அதிஷ்டமான வருடம். சென்னையில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. கல்யாண வாழ்க்கை மிக நன்றாக உள்ளது. கையில் மோதிரம் மட்டுமே மாறியுள்ளது என்று கூறினார்.