Connect with us
 

News

சிம்பு படத்துக்காக சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட அரங்கம் !

Published

on

சிம்பு வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சிம்பு நடிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தத் காடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது அங்கு நடந்து முடிந்த நிலையில் அடுத்ததாக சென்னையில் நடக்கவுள்ளது.

இதற்காக சென்னைக்கு அருகேயுள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் மும்பையின் ஒரு பகுதி போன்ற பிரமாண்ட அரங்கம் போடப்பட்டுவருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அரங்கில் மொத்தம் 25 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்கிறார்கள் படக்குழு. வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.