Connect with us
 

News

என்னை மட்டும் ஆபாச நடிகை என்று முத்திரை குத்துகிறார்கள் – கிரண் !

Published

on

நடிகை கிரண் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற பல தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இவர் அண்மையில் அளித்த நேர்காணலில் தன் சினிமா அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.

எனக்கு மூன்று திருமணம் ஆகிவிட்டது என்றும் எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் கண்டபடி பேசுகிறார்கள். தமிழ் சினிமாவுக்கு வந்த பிறகு ஒரு படத்திலேயே மிகப்பெரிய ஸ்டார் ஆனேன். குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு என் காதலரை திருமண் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாக நினைத்தேன். இதால் அஜித் போன்ற பெரிய நடிகர் படங்களை கூட தவிர்க்கும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.

துரதிருஷ்வரமாக அந்த காதல் எனக்கு கைகூடாமல் போனது அதனால் எனக்கு பட வாய்ப்புகளும் குறைந்து போனது. என்னுடன் நெருங்கி பழகிய நண்பர்கள் பலர் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இரவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார்கள். அப்போதான் எனக்கு இந்த சினிமாவில் யாரும் உண்மையான நண்பர்கள் இல்லை என்ற உண்மையை உணர்தேன்.

நல்லவர்கள் என்று நான் பழகிய அனைத்து ஆண்களும் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள். இதனால் சற்று அதிருப்தி அடைந்தேன். எத்தனை நடிகைகள் இங்கு பிகினி அணிகிறார்கள். ஆனால் நான் அணிந்தால் மட்டும் என்னை ஆபாச நடிகை என்று முத்திரை குற்றுகிறார்கள்.

நான் பிரபல நடிகர் ஒருவரை காதலித்தேன் அவர் என்னை ஏமாற்றியது எல்லாம் உண்மைதான். ஆனாலும் அதை பற்றி எல்லாம் நான் இங்கு அதிகம் பேச விரும்பவில்லை என்று கூறினார்.