Connect with us
 

News

பூஜையுடன் ஆரம்பமானது இன்று நேற்று நாளை 2 ஷுட்டிங் !

Published

on

தமிழ் சினிமா திரையுலகில் முதல் டைம் டிராவல் திரைபப்டமாக வெளியான முதல் திரைபப்டம் ‘இன்று நேற்று நாளை’ திரைபப்டம் இது 2015-ஆம் ஆண்டு விஷ்னு விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று அண்மையில் அறிவிப்பு வெளியாகிருந்தது. இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் ஆர்யா நடித்திருப்பார் அவர்தான் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடிப்பார் என்று செய்திகள் வெளியானது.

இன்று இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பூஜை நடைபெற்று இதில் முதல் பாகத்தில் நடித்த அனைவருமே இதில் நடிக்கிறார்கள் என்று படக்குழு அறிவித்தது.

இந்த இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தை இயக்கிய ரவிகுமாரின் உதவியாளர் கார்த்திக் இயக்கயுள்ளார். சி.வி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் 25-வது படமாக இந்த படம் உருவாக உள்ளது ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைக்க தினேஷ் குமார் ஒளிப்பது செய்கிறார்.