Connect with us
 

News

அனுஷ்கா, சமந்தா நடிகைகள் மீதான பார்வையை மாற்றியவர்கள் – ராஷி கன்னா !

Published

on

தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளா நடிகை ராஷி கன்னா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ராஷி கன்னா தற்போது கொடுத்த பேட்டியில் கூறியிருப்பது:- எனக்கு ஊஹலு குஸகுஸலடே தெலுங்கு படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்து திறமையான நடிகை என்ற பெயரும் கிடைத்தது. அதன் பிறகு வணிக பட வாய்ப்புகளே வந்தன. சினிமா துறை ஆணாதிக்கம் உள்ள துறையாகவே இருக்கிறது.

ஆனாலும் திறமை வெளிப்படுத்தி வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அனுஷ்கா, சமந்தா மாதிரி திறமையான நடிகையாக இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும். அவர்கள் இருவருமே தென்னிந்திய நடிகைகள் மீதான மக்களின் பார்வையை மாற்றியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு முன்புவரை நடிகைகள் என்றால் பார்க்க அழகாக இருக்க வேண்டும் பாடல் காட்சிகள் நடனம் ஆட வேண்டும் என்ற நிலைதான் இருந்தது. இப்போது நன்றாக நடிக்க தெரிய வேண்டும் என்ற நிலைமைக்கு மாறி இருக்கிறது. தென்னிந்திய திரையுலகில் திறமையான நடிகைகள் இருக்கிறார்கள். நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருக்கிறது என்றார்.