Connect with us
 

News

கடைசி விவசாயி மணிகண்டனை சொந்த ஊருக்கு சென்று பாராட்டிய மிஷ்கின் !

Published

on

விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கடைசி விவசாயி’ இப்படத்தின் கதை நாயகனாக நல்லாண்டி என்ற ஒரு பெரியவர் நடித்திருந்தார்.

படம் வெளியான நாள் முதல் அனைவருமே இப்படத்தை பாரட்டி வருகிறார். இந்த நிலையில் இயக்குநர் மிஷ்கின் இயக்குநர் மணிகண்டனை உசிலம்பட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கே சென்று பாராட்டியுள்ளார்.

இன்று மாலை நேரில் சென்று சந்தித்து இயக்குநர் மணிகண்டனுக்கு மாலை அணிவித்து கட்டித்தழுவி பாராட்டினார். அதனை தொடர்ந்து இப்படத்தில் நடித்த நல்லாண்டி பெரியவரின் இல்லத்திற்கு சென்று அவர் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

இது பற்றி மிஷ்கின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியதாவது :- கடைசி விவசாயி தந்த மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த அவனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களை முத்தமிட்டேன். படத்தின் கதையின் நாயகனாக, ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்குச் சென்று அவர் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்குச் சென்று மதிய உணவு உண்டோம். இந்த முழு நாளும் ஒரு அற்புத நாளாக மாறியது.

மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்