Connect with us
 

News

பிப்ரவரி முதல் வாரத்தில் பத்து தல படத்தில் கலந்து கொள்ளும் சிம்பு !

Published

on

சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் திரைப்பட, ‘பத்து தல’ கிருஷ்ணா என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் கெளதம் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும். மார்ச் முதல் வாரத்தில் சிம்புவின் காட்சிகள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘பத்து தல’ படத்தில் எடிட்டர் பிரவீன் இணைந்துள்ளார் என்று நேற்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இவரை தவிர முக்கியமான இன்னோரு நபரும் இப்படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.