Connect with us
 

News

விரைவில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிவடையும் !

Published

on

இயக்குனர் மணிரத்ணம் பென்னியின் செல்வன் நாவலை படமாக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 2 பாகங்களாக தயாராகி வருகிறது. இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா நடித்து வருகின்றனர்.

சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, ஆகியோரும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே தாய்லாந்து காடுகளில் நடித்தி முடித்தனர்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகதில் அரண்மனை அரங்குகள் அமைத்து நடத்தினர். இதில் ஐஸ்வர்யாராவும் கலந்து கொண்டு நடித்தார். அதன் பின்னர் கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதால் படப்பிடிப்பை நிறுத்தினர். இந்த படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களின் இடையில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மணிரத்னம் தற்போது அளித்த பேட்டியில் பொன்னியின் செல்வன் படத்துக்கான ஒரு கட்ட படப்பிடிப்பு முடியவில்லை. தற்போதைய சூழ் நிலையில் படப்பிடிப்பை நடத்துவது கஷ்டம். அனைத்து முன்னெச்சிரிக்கை நடவடிக்கையும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. விரைவில் படப்பிடிப்பை ஆரம்பித்து முடிப்போம் என்று நம்புகிறேன். எனது முந்தைய படங்களை விட பொன்னியின் செல்வன் மிக பிரம்மாண்ட படமாக இருக்கும் என்றும் கூறினார்.