Connect with us
 

News

மாநாடு படத்தை தடை செய்ய வேண்டும் வேலூர் இப்ராஹும் போலீஸ் புகார் !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பிம் இரண்டு தினங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாநாடு.

மாநாடு திரைப்படம் இந்து மற்றும் முஸ்லீம் ஒற்றுமையைச் சீர்குலைப்பதாகவும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என பா.ஜ.க செயலாளர் வேலூர் இம்ராஹீம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:-

மாநாடு படத்தில் காவல் துறையினரை தீவிரவாதிகள் போல் சித்தரித்துள்ளனர். கோவை குண்டுவெடிப்பு குறித்து தவறான தகவலை இப்படத்தில் பரப்பியுள்ளனர். இப்படத்தால் இந்து மற்றும் இஸ்லாமிய நட்பை சீர்குலைக்கும் விதமாக உள்ளது.

வன்முறை காட்சிகளை தூண்டும் விதமாக உள்ள இப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.