News
அஜித் தாயார் மறைவு நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர் விஜய் !
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று அதிகாலை காலமானார்.
தாயாரின் மறைவுச் செய்தியைக் கேட்டு, துபாயில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித் உடனடியாக நேற்று இரவு சென்னை திரும்பினார்.
நடிகர் அஜித்தின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரை உலகினரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். நேற்று இரவு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை நேரில் கட்டிப்பிடித்து ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். அவருடன் நடிகை த்ரிஷாவும் நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல் கூறினார். மேலும், பல சினிமா பிரபலங்களும், அரசியல் முக்கியஸ்தர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நேரில் சென்றும் தங்களது துயரத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அஜித்தின் தாயார் மோகினி மணியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அஜித்தின் வீட்டிலிருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தை வந்தடைந்தது.அங்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, அஜித்தின் இல்லம் மற்றும் பெசன்ட் நகர் மின் மயானப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
