Connect with us
 

News

உண்மையைப் பேச தைரியம் இல்லை” – ‘ஜன நாயகன்’ படம் குறித்து இயக்குநர் ஹெச். வினோத் பேட்டி !

Published

on

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஒட்டுமொத்தத் திரை உலகமும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் ‘ஜன நாயகன்’. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில், ‘ஜன நாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார். இதனால் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) வழங்குவதில் ஏற்பட்டுள்ள சில சிக்கல்கள் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. சான்றிதழ் கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தயாரிப்புத் தரப்பு தெரிவித்திருந்தது.

தற்போது தணிக்கை வாரியம் சான்றிதழ் தராமல் இழுத்தடித்து வருவதால், இப்படம் ஜூன் மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஜூன் 22-ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால், அதற்கு முன்பாகவே படத்தை திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஹெச். வினோத்திடம் ‘ஜன நாயகன்’ எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அவர் பேசுகையில், “ஜன நாயகன் திரைப்படத்திலுள்ள உண்மையைப் பேச எனக்கு தைரியம் இல்லை. ஒருவேளை நான் பேசினாலும், அதனை வெளியே போடும் (வெளியிடும்) தைரியம் உங்களுக்கும் இல்லை” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வினோத்தின் இந்த மர்மமான பதில் விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடையே பெரும் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “அப்படி என்ன அரசியல் அல்லது அதிரடியான உண்மைகள் அந்தப் படத்தில் மறைந்திருக்கின்றன?” என்ற கேள்விகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.