Connect with us
 

News

மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்புகிறாரா நடிகர் ரவி மோகன். ரசிகர்கள் உற்சாகம் !

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். சமீபகாலமாக இவரது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறி வருகின்றன. குறிப்பாக, இவரது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து ரவி மோகன் தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஊடகங்களைச்ந்தித்த நடிகர் ரவி மோகன், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிகவும் கொதித்துப் பேசினார். மேலும், “நீதிமன்றத்தில் இருந்து எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை இனி புதிய திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தது தமிழ் திரைஉலகிலும், அவரது ரசிகர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தனது முந்தைய முடிவை நடிகர் ரவி மோகன் தற்போது மறு பரிசீலனை செய்திருப்பதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. ரவி மோகனின் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பிறகு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கார்த்தி அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது ரவி மோகனுக்கு நடிகர் கார்த்தி பெரும் ஆறுதலும், மன தைரியமும் அளித்ததாகக் கூறப்படுகிறது.முதற்கட்டமாக, ரவி மோகன் தனது முடங்கிப்போயிருந்த ‘ப்ரோ கோடு’ (BRO CODE) திரைப்படத்தின் பணிகளை மீண்டும் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நண்பர் கார்த்தி கொடுத்த தைரியத்தின் காரணமாக, ரவி மோகன் மீண்டும் தனது திரைப்பட வேலைகளில் முழு மூச்சுடன் ஈடுபடப் போவதாகத் தெரிகிறது. அதன்படி, அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ‘ப்ரோ கோடு’ (BRO CODE) திரைப்படத்தின் எஞ்சிய பணிகளை முதன்முதலாகத் தொடங்கி, அதனை முழுமையாக முடித்துக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார். விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் ரவி மோகன் மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பவிருக்கும் இந்த செய்தி, அவரது ரசிகர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.