Connect with us
 

News

கார்த்தி – கல்யாண் சங்கர் இணையும் புதிய படம்: நாயகியாகும் மீனாட்சி சவுத்ரி !

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘சர்தார் 2’ மற்றும் இயக்குநர் தமிழ் இயக்கும் ‘மார்சல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, கார்த்தி தற்போது ஒரு நேரடி தெலுங்கு பட இயக்குநருடன் கைகோர்த்துள்ளார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘மேட்’ (Mad) படத்தின் இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது நடிகை மீனாட்சி சவுத்ரி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யின் ‘கோட்’ உள்ளிட்ட பெரிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தில் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழல் காரணமாக, இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், இப்படத்தின் பூஜையுடன் கூடிய முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் தமிழ் இயக்கி வரும் ‘மார்சல்’ படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தாமதமாகி வருகிறது. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் கார்த்தி, கல்யாண் சங்கர் படத்தின் முதற்கட்ட பணிகளை விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

‘மார்சல்’ படத்தின் பணிகளை முடித்த பிறகு, மீண்டும் கல்யாண் சங்கர் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி முழுமையாகக் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் அதிரடி ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் என கார்த்தி கலக்கி வருவது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.