Connect with us
 

News

அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பர் கைது !

Published

on

நடிகை Amala Paul பிரபு சாலமன் இயக்கிய மைனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதன் பின்னர் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டார். சில வருடங்களுக்கு பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள ஆரோவில் என்ற பகுதியில் உள்ள Amala Paul தங்கியிருந்த போது இவரின் நண்பர் பவீந்தர் விங் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் Amala Paul -லுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அமலா பால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீஸ் பவீந்தர் சிங்கை கைது செய்தது. இது தொடர்பாக மேலும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.