Connect with us
 

News

பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை தவறவிட்ட – அமலாபால் !

Published

on

இயக்குநர் மணிரத்னம் அவர்களின் கனவு திரைப்படம் Ponniyin Selvan இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் இம்மாதம் 30-ம் தேதி திரைக்கு வரவிருகிறது. ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை அமலாபால் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு இரண்டு முரை வாய்ப்பு கிடைத்தும் நான் அதை தவற விட்டுவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறுகையில் ‘பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு என்னை அழைத்து ஆடிஷன் செய்தார்கள். ஆனால் அப்போது படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதன் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய போது எனக்கு அழைப்பு விடுத்தார் இயக்குநர் மணிரத்னம். ஆனால் அப்போது என்னால் பொன்னியின் செல்வன் படத்தில் கொடுத்த வேடத்தில் நடிப்பதற்கு நான் மனதளவில் தயாராக இல்லை. அதனால் அந்த வாய்ப்பை நான் மறுத்து விட்டதாகவும் அந்த வேடத்தில் நடிக்காதது எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அந்த வேடத்தில் நான் நடிக்காததற்கு சில காரணங்கள் உள்ளது என்றும் கூறினார்.