News
அருண் விஜய் – மிஷ்கின் இணையும் புதிய படம் !
தமிழ் திரையுலகில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்குவதன் மூலம் தனக்கென தனிப் பாணியை உருவாக்கியவர் இயக்குனர் மிஷ்கின். இவருடைய அடுத்த புதிய திரைப்படத்தில் முன்னணி நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘பிசாசு’ உள்ளிட்ட பல வித்தியாசமான சைக்கோ-திரில்லர் மற்றும் எமோஷனல் திரைப்படங்களை இயக்கி மிஷ்கின் முத்திரை பதித்துள்ளார். இவர் இயக்கத்தில் அண்மையில் உருவான ‘டிரெயின்’ மற்றும் ‘பிசாசு 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இருப்பினும், சில தொழில்நுட்ப மற்றும் ரிலீஸ் சார்ந்த சிக்கல்கள் காரணமாக இப்படங்களின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.
இதனால், திரைப்படங்கள் ரிலீஸாவதில் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து மிஷ்கின் முழு நேர நடிகராக மாறினார். கடந்த சில மாதங்களாகப் பல்வேறு திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிஸியாக வலம் வந்த மிஷ்கின், தற்போது மீண்டும் இயக்குனராக களம் இறங்கத் தயாராகிவிட்டார்.
மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த புதிய ஆக்சன்/திரில்லர் கதையில், அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கவிருப்பது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அண்மைக் காலமாகவே ஆக்ஷன் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய்க்கும், மிஷ்கினின் டார்க்-திரில்லர் பாணிக்கும் நல்ல பொருத்தம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் விஜய் மற்றும் மிஷ்கின் ஆகிய இருவரின் கூட்டணியில் படம் உருவாவது இதுவே முதல்முறை என்பதால், இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தெரிந்துகொள்ள கோலிவுட் வட்டாரமும் ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
