Connect with us
 

News

மே 8-ல் வெளியாகிறது தளபதி விஜய் நடித்துள்ள ஜன நாயகன் !

Published

on

கடந்த சில மாதங்களாகவே பெரும் எதிர்பார்ப்பையும், அதேசமயம் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்து வந்த நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவான இப்படம், சென்சார் சிக்கல்கள் காரணமாக பொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளிப்போனது. அதைத்தொடர்ந்து மறுதணிக்கை மற்றும் தேர்தல் என அடுத்தடுத்து வந்த தடங்கல்களால் படத்தின் வெளியீடு கேள்விக்குறியானது. இடையில் படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது.

இன்று தணிக்கைத் துறை அதிகாரிகள் இருவர் இப்படத்தைப் பார்த்து சான்றிதழ் தொடர்பான விவரங்களை வழங்க உள்ளதாகத் தெரிகிறது. தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) முறையாகக் கிடைத்துவிட்டால், வரும் மே மாதம் 8-ஆம் தேதி (மே 8) இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படம் ஏற்கனவே இணையத்தில் கசிந்திருந்தாலும், திரையரங்கில் படத்தைப் பார்க்கும் அனுபவமே தனி என விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தேர்தல் முடிவுகள் மற்றும் தணிக்கை அனுமதி என அனைத்தும் சாதகமாக அமையும் பட்சத்தில், மே இரண்டாவது வாரத்தில் ‘ஜன நாயகன்’ திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.