Connect with us
 

News

மதுரையில் மே மாதம் பிரம்மாண்டமாக தொடங்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படப்பிடிப்பு !

Published

on

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சிவகுமார் முருகேசன் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் சிவகார்த்திகேயன் இணையும் புதிய படம் ‘சேயோன்’. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்த ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு, வரும் மே மாதத்தில் முழுவீச்சில் தொடங்கப்பட உள்ளது. இந்த முறை நடிகர்களின் கால்ஷீட் மற்றும் இதர திட்டமிடல்கள் சரியாக அமைந்துள்ளதால், படப்பிடிப்பை ஒரே கட்டமாக (Single Schedule) முடித்துவிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் முக்கிய காட்சிகள் மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக, உலகப்புகழ் பெற்ற மதுரை அழகர் கோயில் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், அங்கு நிலவும் நிஜமான கூட்டத்தையே படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக பிரத்யேக கேமரா அமைப்புகளுடன் களமிறங்குகிறது படக்குழு.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்:

  • பாக்ய ஸ்ரீ போஸ்

  • பால சரவணன்

  • அருள்தாஸ்

உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிவகார்த்திகேயன் ஒரு எதார்த்தமான கதையில் நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.