Connect with us
 

News

மனித குலத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துக்கிறார் மன்சூர் அலிகான் திரிஷா கண்டனம் !

Published

on

நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி மோசமாக பேசிய வீடியோ பதிவு வெளியானதிலிருந்து கடும் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் அளித்த ஒரு பேட்டியில், ‘நான் ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவிலேயே இந்த விஷயத்தை சொல்லி இருப்பேன். ஆனால், கலவரம் பண்ண சிலபேர் இருக்கிறார்கள் என்பதால் சும்மா இருந்துவிட்டேன். இந்த படத்தில் திரிஷாவுடன் நடிக்கிறோம். பெட்ரூம் சீன் இருக்கும். குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்ட மாதிரி திரிஷாவையும் தூக்கி போடலாம் என்று நினைத்தேன்’ என்று மன்சூர் அலிகான் பேசியிருந்தார்.

இதையடுத்து அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று திரிஷா தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சமீபத்தில் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி கேவல மாகவும். கீழ்த்தரமாக வும் பேசிய வீடியோ என் கவனத்துக்கு வந்தது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், இதில் பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு, வெறுக்கத்தக்க மற்றும் மோசமான ரசனையை காண்கிறேன். அவரைப் போன்ற பரிதாபகரமான ஒருவருடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். மேலும், எனது திரையுலக வாழ்க்கை முழுவதும் இந்த மாதிரி ஒருபோதும் நடக்காது என்பதை உறுதி செய்கிறேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்’ என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.