Connect with us
 

News

ராஜா ராணி படத்தில் நான்தான் நடிக்கவிருந்தேன் – சாக்ஷி அகர்வால் !

Published

on

நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார். இருந்தாலும் பிக்பாஸ் போன பின்னரும் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அண்மையில் இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ‘ ராஜா ராணி படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க முதலில் எனக்குதான் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் இரண்டு நாட்கள் நடித்தேன். பின்னர் தயாரிப்பு நிறுவனம் அழைப்பதாக சொன்னார்கள் ஆனால் படத்தின் ஷூட்டிங் படப்பிபிப்பு முடிந்து படமும் வெளியானது.

அவர்கள் அழைப்பார்கள் என்று காத்திருந்தேன். அப்படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு இதில் தவறு நடந்தது என்று தெரியவில்லை அதை பற்றி நான் பேசவும் விரும்பவில்லை என்று கூறினார்.