Connect with us
 

News

கொலை வெறி பாடலால்தான் 3 திரைப்படம் தோல்வி அடைந்தது – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் !

Published

on

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நட்க்க சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.

படம் வெளியான முதல் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. உலக அளவில் லால் சலாம் திரைப்படம் சுமார் 8 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் லால் சலாம் படத்தின் ப்ரோமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 3 திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கொலைவெறி’ பாடல் நாங்கள் எதிர்பார்த்தைவிட மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனாலும் அது படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துவிட்டது.

நல்ல கதையம்சம் கொண்ட அப்படத்திற்கு அந்த பாடல் பெரிய அழுத்தமாக மாறிவிட்டது. சொல்லப்போனால் அந்த பாடல் படத்தை முழுவதையும் முழுங்கி விட்டது. திரையரங்கில் 3 திரைப்படம் வெளியான போது கிடைக்காத வரவேற்பு தொலைக்காட்சியிலும் மறுவெளியீட்டிலும் கிடைத்தது. சொல்லப்போனால் கொலைவெறி பாடலால் 3 படத்திற்கு எந்த ஒரு பயனுமில்லை.

அந்த காலகட்டத்தில் கொலைவெறி பாடல் மிகப்பெரிய ஹிட் பாடலாகவும் டிரெண்டிங் பாடலாகவும் இருந்தது. ஆனாலும் 3 திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது என்பது இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்று ஆகும்.