Connect with us
 

News

நேரம் அமையும் போது கண்டிப்பாக படம் இயக்குவேன் – ஜெயம் ரவி !

Published

on

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் சைரன். இப்படம் பிப்ரவரி 16-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை அடுத்து ஜீனி, தக் லைப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேரலை ஒன்றில் அளித்த பேட்டியில் ‘ ஒரே மாதிரி இல்லாமல் வித்தியாசமான கதைகளில் நடிக்க விரும்புகிறேன். சைரன் படமும் அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான கதைதான். திறமையான புதிவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் புதுமுக இயக்குநர்களுடன் பணியாற்றுகிறேன்.

அதே போல எனக்கு படம் இயக்கும் எண்ணம் உள்ளது. அதற்காக மூன்று கதைகளை தயார் செய்து வைத்துள்ளேன். அதில் ஒரு கதையை யோகி பாபுவுக்காக உருவாக்கியுள்ளேன். இன்னொரு கதையில் நானும் மற்றொரு கதையில் நானே இல்லை வேறு ஒரு நடிகர் நடிக்கும் வகையில் தயார் செய்துள்ளேன். கண்டிப்பாக நேரம் அழைக்கும் போது படம் இயக்குவேன்.

ஓடிடி வளர்ச்சிலும் தமிழக ரசிகர்கள் தியேட்டர்களில் படம் பார்க்க விரும்புகிறார்கள். நல்ல கதையம்சத்தில் வரும் சின்ன படங்களுக்கும் வெற்றி பெருகின்றன. பரதநாட்டியத்தை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடிக்க எனக்கு ஆசை.

தனி ஒருவன் இரண்டாம் பாகம் படத்தை எடுப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான திரைக்கதை தயாராகி விட்டது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.