Connect with us
 

Teaser

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீசரை வெளியிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் !

Published

on

ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பான்-இந்தியா திரைப்படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீசரை  பான்-இந்தியா அளவிலான முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்டனர். ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்தின் டீசரை, தமிழில் தனுஷும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், மலையாளத்தில் துல்கர் சல்மானும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல புதிய மற்றும் சுவாரசியமான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில், திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறுகையில், “இந்த பிரமாண்டமான திரைப்படம் அதிகப் பொருட்செலவில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை திரைக்கு கொண்டு வர நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், “எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ அமைந்துள்ளது. மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வழங்கும் என்று நான் நம்புகிறேன். இந்த மிகப்பெரிய படத்திற்கு ஆதரவளித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.

விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படமான ‘ஜிகதண்டா டபுள் எக்ஸ்’ பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.