Connect with us
 

News

அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு சினிமாவில் இல்லை மைக்கேல் இயக்குநர் !

Published

on

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் மாநகரம் புகழ் சந்தீப் கிஷன் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் மைக்கேல்.

விஜய்சேதுபதி, கெளதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கெளசிக் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்தை ஶ்ரீ வெங்கடேஷ்வரா ஶ்ரீனிவாஸ் தயாரித்திருந்தார். சுமார் 5 மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியானது.

படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தாலும் உலகமெங்கும் 3 நாட்களில் சுமா ரூ.7.7 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்: உங்கள் கருத்துக்களுக்கு எனது அன்பான நன்றி. எனது எல்லா படைப்புகளையும் போலவே மைக்கேல் படமும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒரு படம்தான். இப்படத்திற்கு எனது 100 சத வீத உழைப்பை கொடுத்துள்ளேன்.

அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு ஒன்று சினிமாவில் இல்லை. ஒவ்வொருக்கும் ரசனை மாறுபடும். மைகேல் படத்தை ரசித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்கத் தயாராக இருக்கேன். உங்கள் அனைத்து கருத்துகளையும் நான் மதிக்கிறேன். ஆகபெரும் வாஞ்சையுடன் ரஞ்சித் ஜெயக்கொடி என பதிவிட்டுள்ளார்.