Connect with us
 

News

விண்ணைத்தாண்டு வருவாயா இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் – கெளதம் மேனன் !

Published

on

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படத்தின் காதல் காட்சிகளும் பாடல்களும் இன்று வரையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் எனற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்த நிலையில்தால் கொரோனா காலகட்டத்தில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை கெளதம் மேனன் இயக்கினார். இந்த குறும்படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் 2 பாகத்தின் முன்னோட்டம்தான் இது என்று கூறப்பட்டது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கெளதம் மேனனிடம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் 2-ம் பாகம் வருமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கெளதம் மேனன் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகத்தின் திரைக்கதை பணிகள் நடந்து வருகிறது. நிச்சயமாக அந்த படத்தை எடுப்பேன் என்று பதிலளித்தார்.