Connect with us
 

News

படம் பார்க்காமல் என்னை அவதூறு செய்வதா – அனுபமா பரமேஸ்வரன் !

Published

on

தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழ் மொழி மட்டுமல்ல தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகவுள்ள திரைப்படம் டில்லு ஸ்க்வேயர். இப்படத்தில் முத்தக்காட்சி ஒன்றில் நடித்துள்ளார். இதனை பலரும் அவதூறாக விமர்சித்து வருகிறார்கள்.

இதனை பார்த்து கோபமடைந்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன் இது குறித்து அண்மையில் அளித்துள்ள பேட்டியில் ‘ நான் டில்லு ஸ்க்வேயர் படத்தில் முத்தக்காட்சியில் நடித்துள்ளதை பார்த்து ஏதோ பெரிய தவறு நான் செய்து விட்டதாக ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என சொன்னது என் 18 வயதில். இப்போது எனக்கு சினிமா பற்றிய முதிர்ச்சி வந்து விட்டது. கதைக்கு தேவைப்பட்டால் அது போன்ற காட்சிகளில் நடிப்பது தவறு இல்லை.

ஒரே மாதிரியான படங்களில் நடித்து நடித்து எனக்கு சலித்து விட்டது. ஒரு படத்தை பார்த்து விட்டு விமர்சிக்கவே பாராட்டவோ செய்யலாம் ஆனால் படத்தை பார்க்காமலையே அவதூறாக கேலி செய்வது சரி அல்ல என கூறியுள்ளார்.