Connect with us
 

News

வேளச்சேரி மக்களுக்கு உதவிய நயன்தாரா-வின் பெமி9 நிறுவனம் !

Published

on

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு வேளச்சேரி பகுதியில் பாதிப்படைந்த மக்களுக்கு நடிகை நயன்தாரா தனது பெமி 9 நிறுவனத்தின் மூலம் உதவி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை வெள்ளம் மற்றும் புயல் காரணமாக ஏளராமான மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக வேளச்சேரி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பெமி 9 என்ற நிறுவனத்தின் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் உணவுப் பொருட்கள் சானிட்டரி நாப்கின்கள் வழங்கினார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நயன்தாராவுக்கு மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இது போல இன்னும் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டும் வருகிறது.

https://www.instagram.com/reel/C0i6qZBsm47/?utm_source=ig_web_copy_link