Connect with us
 

News

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் கமல்ஹாசன் !

Published

on

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நடிகர் சங்க கட்டிட பணிகள் நிதி பற்றாக்குறை காரணமாக இன்னும் முடியாமல் இருக்கிறது. தற்போது இதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நிதி வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிகர் சங்க கட்டிட பணியைத் தொடர்வதற்காக ரூ.1கோடி நிதி வழங்கியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினரான கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது நடிகர் சங்க கட்டிட பணியைத் தொடவதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களிடம் வழங்கினார்.